உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத்தில் ரீல்ஸ் வீடியோ மோகத்தால் விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹபைத்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியான ஜிதேந்திர குமார் என்பவர், சமூக வலைதளத்தில் புகழ் பெற விரும்பியுள்ளார். இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கொடிய விஷமுள்ள பாம்பை பிடித்து, தனது கழுத்தில் சுற்றிக்கொண்டுள்ளார்.
பின்னர் மெதுவாக அதன் தலை மீது வாயை நீட்டியபோது, அந்த கொடிய விஷ பாம்பு அவரது நாக்கில் கடித்தது. இதனையடுத்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஜிதேந்திர குமார் உடனடியாக மோரதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.