கேரள மாநிலம், மேப்பாடி அருகே ஆற்றை கடக்க முடியாமல் காட்டு யானைகள் அவதிக்குள்ளான வீடியோ வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேப்பாடி அருகே உள்ள காந்தன் பாரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த ஆற்றை காட்டு யானை ஒன்று தனது குட்டியுடன் கடக்க முயற்சித்தது.
ஆனால், காட்டாற்று வெள்ளத்தின் வேகம் காரணமாக யானைகள் ஆற்றை கடக்க முடியவில்லை. இதனையடுத்து யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.