மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் எப்படி ஒரு திட்டத்திற்கான நிதியை பெற முடியும் என தமிழக அரசுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஆதவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூரில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், பிரதமர் மோடியின் சாதனை விளக்க புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன், மத்திய அரசின் விதிகளை கடைபிடிக்கவில்லை என்றால் நிதியை பெறுவதில் சிரமம் ஏற்படும் என தெரிவித்தார்.