அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த சார் என்பதை திமுகவினர் சொல்ல மறுக்கின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், கரிசல்குளம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கான கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டவர் இபிஎஸ் என்றும் பொள்ளாச்சி வழக்கில் தண்டனை வாங்கித் தரப்பட்டுள்ளது என்றும் திமுக அரசு எதற்கும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.
யார் அந்த சார் என்பதை திமுகவினர் சொல்ல மறுக்கின்றனர் என்றும் இபிஎஸ் உத்தரவிட்டால் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்போம் என்றும் பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் என்று செல்லூர் ராஜூ கூறினார்.