குஜராத் மாநிலத்தில் உள்ள ராம்காட் அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேறி வருகிறது.
பொடாட் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் ராம்காட் அணை நிரம்பியது. தொடர்ந்து அணையிலிருந்து உபரி நீர் வெளியேறுவதால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.