ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள நம்பு நாயகி அம்மன் கோயிலில் சௌமியா அன்புமணி தனது மகள்களுடன் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது தாங்கள் அரைத்து எடுத்து வந்த விரலி மஞ்சளையும் அம்மனுக்குச் சாற்றினர். சமீப நாட்களாக பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
இதனால் அக்கட்சிக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டுத் தொடர்ந்து அறிவிப்புகள் வெளிவந்தபடியே உள்ளன. இந்நிலையிலேயே சௌமியா அன்புமணி சாமி தரிசனம் செய்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.