பெங்களூருவில் இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு ஜெயநகரில் இரு சக்கர வாகனத்தைப் பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றதாகவும், போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் கேள்வி எழுப்பிய இளம்பெண்ணை ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் அறைந்து கீழே தள்ளிவிட்டார்.
தாக்குதலுக்கான பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ராபிடோ ஓட்டுநர் சுஹாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.