22ஆம் தேதி முருகரைக் கையில் எடுத்திருக்கிறோம், 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
22ஆம் தேதி முருகரைக் கையில் எடுத்திருக்கிறோம். 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என்றும் முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
பாஜக வலிமையான கூட்டணி என்பதாலேயே எங்களைப் பற்றி திமுக தொடர்ந்து பேசி வருகிறது என்றும் இது அரசியல் கட்சி மாநாடு அல்ல, பக்தர்களுக்கான மாநாடு என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.