தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமை தளபதியும், தலைமை மத குருவுமான அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியை கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ராணுவ தளபதி அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி ஷத்மானி, துல்லியமான உளவுத்துறை தகவல்களைத் தொடர்ந்து, மத்திய தெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளது.