திருச்சியில் அரசு பேருந்து பழுதாகி சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து, மத்திய பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஒத்தக்கடை சிக்னல் அருகே பழுதடைந்து நின்றது.
இதையடுத்து அந்த பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் மாற்றுப் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு பேருந்து சாலையில் நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.