பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கண்டெய்னர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவையிலிருந்து பல்லடம் நோக்கி லோடு ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்து. பல்லடம் நால்ரோடு பகுதி வழியாகச் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி வலது புறமாகத் திரும்பியது. அப்போது, அதிக பாரத்துடன் இருந்த கண்டெய்னர் பெட்டி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கண்டெய்னர் அடியில் சிக்கிய இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் கண்டெய்னரை அகற்றி, இருவரின் உடல்களையும் மீட்டனர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.