திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி 5 நிமிடங்கள் புஜங்காசனத்தில் நின்று 95 மாணவர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், 11வது சர்வதேச யோகா தின விழா மற்றும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
இதில் பயிற்சி மையத்தின் மாணவ, மாணவியர், 95 பேர், தொடர்ந்து ஐந்து நிமிடங்கள், புஜங்காசனத்தில் நின்று உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை ‛நோபல் உலக சாதனை’ புத்தகத்தில் இடம் பெற்றது.