மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
நீட் தேர்வின்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தங்களால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் 16 பேர் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில், மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தபோது, தேசிய தேர்வு முகமை தரப்பில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் சிசிடிவி செயல்படவில்லை எனக் கூறி, புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, மறுதேர்வு நடத்தக் கோரிய வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.