ஈரானால் இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயாரிக்க முடியும் என இஸ்ரேல் கணித்த நிலையில், 3 ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அணுகுண்டு தயாரித்து விட்டால், தங்களுக்கு பேராபத்தாக முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஈரான் வைத்திருக்கும் யுரேனியம் இருப்பு அடிப்படையில், இரண்டரை நாட்களில் அந்நாடு அணுகுண்டு தயார் செய்துவிட முடியும் என்று இஸ்ரேல் கணித்திருந்தது.
இதற்கிடையில் அமெரிக்க உளவுத்துறை இதற்கு மாறான தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஈரான் அணுகுண்டுகளை தயாரிக்க 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என கணித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஈரானின் அணு ஆயுதத் திட்டம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஈரானின் அணுகுண்டு திறன் தொடர்பாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேல் இடையே முரண்பாடு ஏற்பட்டிருப்பதை காட்டுவதாக உள்ளது.