கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் என குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 3 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தன்கர், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், புதிய கல்வி கொள்கையை உருவாக்கியது நாட்டின் கல்வி பயணத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படும் என தெரிவித்தார். தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய கல்வி கொள்கை, உலகின் தலை சிறந்த கல்வி கொள்கைகளில் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தன்கர், இளைஞர்கள் தங்கள் திறமைகளையும், ஆற்றலையும் முழுமையாக பயன்படுத்த புதிய கல்வி கொள்கை அனுமதிப்பதாகவும் தெரிவித்தார்.