தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக-வினர் சார்பில் வேல் பூஜை நடைபெற்றது.
மதுரை பாண்டிக்கோவிலில் வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முருக பக்தர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி, தேனியில் பாஜக-வினர் சார்பில் வேல் பூஜை நடத்தப்பட்டது.
சந்தை மாரியம்மன் கோயிலில் வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், வேலை ஊரவலமாக எடுத்துச் செல்ல முயன்ற பாஜக-வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி பாஜக-வினர் தங்கள் காரில், வேலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அங்குள்ள விநாயகர் கோயில் சந்நிதியில் வேலை வைத்து வழிபாடு நடத்தினர்.