கனடா பிரதமருடனான சந்திப்பின்போது, இந்திய – கனடா உறவுகள் மிகவும் முக்கியமானவை என பிரதமர் மோடி தெரிவித்த நிலையில், இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்கள் திறக்கப்பட உள்ளன.
கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பை ஏற்று, ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பல்வேறு நாட்டு தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். அந்த வகையில், கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது, கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க் கார்னிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்திய – கனடா உறவுகள் மிக முக்கியமானவை என குறிப்பிட்டார். ஜனநாயகத்தை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதனையடுத்து, இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்களை திறக்க ஒப்பு கொள்ளப்பட்டன.