மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பக்தி மற்றும் நீதி போதனை வகுப்புகள் நடத்த திருப்பதி தேவஸ்தான முடிவு செய்துள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக அரசின் கோரிக்கைப்படி பெங்களூருவில் அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய அளவிலான ஏழுமலையான் கோயில் கட்டப்படவுள்ளதாக தெரிவித்தார்.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு 100 இலவச மின்சார பேருந்துகளை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் குமாரசாமி உறுதியளித்துள்ளதாக கூறிய அவர், திருமலையில் அனைத்து விதமான உணவு பொருட்களையும் ஆய்வு செய்வதற்காக அதிநவீன ஆய்வுக்கூடம் விரைவில் அமைக்கப்படும் என கூறினார்.