தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நாகை – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை 4 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கியது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.
தரைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்ததை அடுத்து, கடல் சீற்றம் காரணமாக கடந்த 14ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை பயணிகள் கப்பல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கப்பல் போக்குவரத்திற்கு துறைமுக அதிகாரிகள் அனுமதி அளித்ததை தொடர்ந்து கப்பல் வழக்கம் போல இயங்கத் தொடங்கியது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை, இந்தியா மற்றும் மற்ற நாடுகளை சேர்ந்த 103 பயணிகளுடன் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் புறப்பட்டு சென்றது.