பிரச்சினைகளை போர்கள் மூலம் தீர்க்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி – குரோஷியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இரு நாடுகளும் தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் நீண்டகால ஒத்துழைப்புக்காக ஒரு திட்டம் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, ஆசியாவாக இருந்தாலும் சரி, பிரச்சினைகளை போர்கள் மூலம் தீர்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.