தேர்தல் தோல்வி பயம் காரணமாக முருக பக்தர்கள் மாநாடு குறித்து அறநிலையத்துறை அமைச்சர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஆந்திராவை சேர்ந்த பவன் கல்யாண் தமிழ்நாட்டில் முருக கடவுளை வணங்க கூடாதா என கேள்வி எழுப்பினார். பொதுமக்கள் அதிக அளவில் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றும், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசை பகைத்துக் கொண்டே இருந்தால் எப்படி நிதி கொடுக்க முடியும் என்றும் அவர் வினவினார். திமுகவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி 15 தொகுதி கேட்பதாகவும், குறைந்தது 10 தொகுதிகளாவது பெற வேண்டும் என அவர்கள நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.