இஸ்ரேல் – ஈரான் போர் வலுத்து வரும் நிலையில் ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றஞ்சாட்டி இஸ்ரேல் 7வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரானில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளதால் அமெரிக்காவின் பல இடங்களில் ஈரானுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்துள்ளன.
குறிப்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே திரண்ட மக்கள், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், ஈரான் – இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்றது.
(ப்ரீத்)