உத்தர பிரதேசத்தில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்ட மனைவியின் மூக்கை கணவன் கடித்து துப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹர்தோய் பகுதியைச் சேர்ந்த ராம் கிலாவன் தனது 25 வயது மனைவியுடன் வசித்து வந்தார். தனது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நபருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருப்பதை அறிந்த ராம் கிலாவன் இருவரையும் கண்காணித்து கையும் களவுமாக பிடித்துள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ராம் கிலாவன், தனது மனைவியின் மூக்கை கடித்து துப்பியுள்ளார். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த ஹரியவான் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராம் கிலாவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.