புதுச்சேரியில் ரேஷன் கார்டு தொடர்பான பணிகளுக்காக பணம் பெற்ற இடைத்தரகர்களை தாசில்தார் எச்சரித்த வீடியோ வெளியாகியுள்ளது.
பாக்கமுடையான்பேட் தொழிற்பேட்டை சாலையில் புதுச்சேரி குடிமைபொருள் வழங்கல் துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ரேஷன் கார்டு தொடர்பான பணிகளுக்கு மக்களிடம் இடைத்தரகர்கள் பணம் பெறுவதாக புகார் எழுந்தது.
புகாரை தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் துறை தாசில்தார் இடைத்தரகர்களை கடுமையாக எச்சரித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.