வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தாயகம் திரும்பினார்.
பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக கனடா, சைப்ரஸ், குரோஷியா நாடுகளுக்கு சென்றார். கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பை ஏற்று ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.
ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு அதிபருடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடிக்கு, சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தாயகம் வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.