இஸ்ரேல் மீது ஈரான் முதன்முறையான செஜ்ஜில் ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
அதிக தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் செஜ்ஜில் ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் தயாரித்து வருகிறது. 2 ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளையும் இந்த ஏவுகணைகள் தாக்கும் திறன் கொண்டவை.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான மோதலில் முதன்முறையான ஈரான் இத்தகைய ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் உள்ள உயரமான கட்டடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.