ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் 52 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நரசிங்கபுரத்தை சேர்ந்த மதியழகன் என்பவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவியுடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 52 சவரன் தங்க நகைகள், 2 லட்ச ரூபாய் பணம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மதியழகன் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அரக்கோணம் கிராமிய போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடிவருகின்றனர்.