ஆஸ்திரேலியா அருகே கைலாசா என்ற தனிநாட்டில் நித்தியானந்தா வசித்து வருவதாக அவரது சீடர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா எங்கு உள்ளார், கைலாஷா நாடு எங்கு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் கைலாஷா நாட்டுக்கு செல்வதற்கு விசா, பாஸ்போர்ட் உள்ளதா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். வழக்கிலிருந்து நித்யானந்தா தரப்பு வழக்கறிஞர் விலகிய நிலையில், அவரது சீடர் அர்ச்சனா ஆஜராகி, ஆஸ்திரேலியா அருகே உள்ள யுஎஸ்கே என்கிற கைலாசா நாட்டில் நித்தியானந்தா வசித்து வருவதாக கூறினார்.
மேலும், இந்த நாடு ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு எனக் கூறிய அர்ச்சனா, நித்யானந்தா தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, வழக்கை ஒத்தி வைத்தது.