கனடா உளவுத்துறை ஒப்புதல் : காலிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா!
Jun 20, 2025, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கனடா உளவுத்துறை ஒப்புதல் : காலிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் புகலிடமாகக் கனடா மாறிவிட்டது என்று நீண்ட காலமாக இந்தியா கூறிவந்த குற்றச் சாட்டை அந்நாட்டு உளவுத்துறை முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

The  Canadian Security Intelligence Service எனப்படும் கனடா பாதுகாப்பு புலனாய்வு சேவை அந்நாட்டின்  உயர்மட்ட உளவுத் துறை நிறுவனம் ஆகும். 2024 ஆம் ஆண்டுக்கான கனடா பாதுகாப்பு புலனாய்வு சேவையின் அறிக்கை, கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் இருப்பை உறுதி படுத்தியுள்ளது.

இந்தியாவைக் குறிவைத்து பயங்கர வாத தாக்குதல்களை நடத்தவும், நிதி திரட்டவும், திட்டமிடவும் காலிஸ்தான் பயங்கரவாதிகள், கனடா மண்ணை ஒரு தளமாகப் பயன்படுத்தி வருவதாக ,முதல்முறையாக அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

1980களில் இருந்து கனடாவில் காலிஸ்தான் அரசியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபடத்  தொடங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், குறிப்பாக காலிஸ்தான் தனிநாடு என்ற பெயரில் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக காலிஸ்தான் பயங்கர வாதிகள் செயல்பட்டு வந்தனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்காக வன்முறை வழிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் பின்பற்றி வந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சிறிய குழுவாக இயங்கும் தனிநபர்களைக்  காலிஸ்தான் பயங்கர வாதிகள் என்று குறிப்பிட்டுள்ள கனடா உளவுத் துறை,  காலிஸ்தான் பயங்கரவாதிகள், கனடாவிலிருந்து கொண்டு, இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

2023-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் கொலம்பியா குருத்வாராவுக்கு வெளியே இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதியான நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும்  இடையிலான  உறவுகள் மோசமடைந்தன.

இந்தப் படுகொலையில் ஆறு இந்தியர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களைக் கூறிவந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை அபத்தமானது என்று   நிராகரித்த இந்தியா, இது குறித்து கனடா எந்த ஆதாரங்களையும் வழங்கவில்லை என்றும் கூறியிருந்தது.

இதற்கிடையே, கனடாவில் உள்ள இந்துக்கள் மீதும், இந்து கோயில்கள் மீதும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தனர். கனடாவின் பிராம்ப்டனில்  உள்ள இந்தக்கோயிலுக்கு வெளியே காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்துக்களைத் தாக்கிய வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வைரலானது. அதில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் கையில் காலிஸ்தான் கொடிகளுடன், கம்புகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களைத் தாக்குவது தெளிவாகத் தெரிந்தது.

அந்த சமயத்தில், தீபாவளி பண்டிகை விழாவில் கலந்து கொண்ட ஜஸ்டின் ட்ருடோ, முதல்முறையாக, கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் பலர் உள்ளனர் என்று ஒப்புக்கொண்டார். இப்போது, கனடா உளவுத் துறை அறிக்கையும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி, கனடாவில் வெளிநாட்டுத் தலையீடு நடவடிக்கைகள் மூலம் காலிஸ்தான் இயக்கத்தை ஒடுக்குவதற்கு இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் கனடா உளவுத்துறை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. சமீபத்தில் கனடாவில் நடந்த ஜி 7 உச்சிமாநாட்டில்,கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா கனடா உறவுகள் “மிகவும் முக்கியமானவை” என்றும், பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து இருதரப்புக்கும் வெற்றி அளிக்கும் ஒத்துழைப்பை அடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவைப் புறக்கணித்து விட்டு கனடாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என்பது பொருளாதார வல்லுனரான கனடா பிரதமர் மார்க் கார்னிக்கும் தெரியும் என்பதால் இந்தியாவின் தேவையை உணர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Tags: கனடாCanadian intelligence confirms: Canada has become a haven for Khalistani terroristsகாலிஸ்தான்கனடா உளவுத்துறை ஒப்புதல்
ShareTweetSendShare
Previous Post

தரமற்ற முறையில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

குப்பைக் கிடங்காக மாறும் வ.உ.சி சந்தை!

Related News

டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாட்கள் கால அவகாசம் : அதிபர் டிரம்ப்

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரி ரயில்வே மேம்பாலம் மாற்றி அமைக்கப்படும் : அறிவிப்பு

அசீம் முனீர்- ட்ரம்ப் சந்திப்பு : தொடரும் ஆப்ரேஷன் சிந்தூர் – செக் வைத்த பிரதமர் மோடி!

சில காங். தலைவர்களுடன் கருத்து வேறுபாடு உள்ளது : சசிதரூர் 

மகாராஷ்டிரா : துணை விமானி உடலுக்கு இறுதி அஞ்சலி!

ஆங்கிலத்தில் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் : அமித்ஷா

Load More

அண்மைச் செய்திகள்

கிருஷ்ணகிரி : கடன் பிரச்னை தொடர்பாக பெண் மீது தாக்குதல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா : ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு!

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக : அண்ணாமலை விமர்சனம்!

திருப்போரூர் : சாலையில் சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டல்!

தயாநிதி மாறன் நோட்டீஸ் : சன் டிவி நெட்வொர்க் விளக்கம்!

மதுரை : திருமாவளவன் கார் முன்பு சண்டையிட்டு கொண்ட விசிக நிர்வாகிகள்!

நெல்லையப்பர் கோயில் நில வழக்கு – நீதிமன்றம் ஆணை!

திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த போலி பட்டாவை ரத்து செய்த கோட்டாட்சியர் : உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியீடு!

ஓசூர் அரசு மருத்துவமனையில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் : மக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies