வாழத் தகுதியற்றதா வடசென்னை?
Jan 14, 2026, 03:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாழத் தகுதியற்றதா வடசென்னை?

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எண்ணூர் கோத்தாரி உரத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் உலோகம் கலந்த நச்சுத் துகள்களால் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட அமோனியா கசிவு பாதிப்பிலிருந்தே மீண்டு வராத நிலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நச்சு பாதிப்பு குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வடசென்னையின் எண்ணூர், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகள் பெருந்தொழிற்சாலைகளின் மையமாகத் திகழ்கின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், காற்றில் பரவும் விச நச்சுக்கள் என அப்பகுதி மக்கள் உயிர்வாழவே ஒவ்வொரு நாளும் பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோத்தாரி உரத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் உலோகம் கலந்த நச்சுத் துகள்கள் புதிய பிரச்சனையை உருவாக்கியுள்ளன.

எண்ணூர் அருகே அமைந்திருக்கும் சத்தியவாணி முத்துநகர், தாழங்குப்பம், நடுக்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்திருக்கும் நச்சுத் துகள்களால் அப்பகுதி மக்கள் தங்களின் நிம்மதியை இழந்து தவித்து வருகின்றனர். காற்றில் கலந்திருக்கும் நச்சுத்துகள்களால் மூச்சுத்திணறல், இருமல், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்வாய்ப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்குளாகி வரும் நிலையில், அது தொடர்பாகத் தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அளித்த புகாரோ  கிடப்பில் போடப்பட்டுள்ளது. வேறு வழியின்றி அப்பகுதி மக்களே நச்சுத்துகள்களை சேகரித்து நடத்திய பகுப்பாய்வில் பல அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியிருப்பு மற்றும் சாலைகளில் காணப்படும் உலோகம் கலந்த நச்சுத் துகள்களில், புளோரைடு, காட்மியம் மற்றும் யுரேனியம் ஆகியவை இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற நச்சுக்களால் இரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு, உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, இதே கோத்தாரி உரத் தொழிற்சாலையில் இருந்து வெளியான அம்மோனியா கசிவு ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னமும் மீண்டு வராத அப்பகுதி மக்கள், தற்போது காற்றில் பரவும் நச்சுத்துகள்களால் நாள்தோறும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

வடசென்னை வளர்ச்சித் திட்டம் எனும் பெயரில் வருடம் தவறாமல் ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகத் தமிழக அரசு ஒருபுறம் கூறிவரும் நிலையில், மற்றொருபுறம் தொழிற்சாலைகளால் மக்கள் படும் பாதிப்பு எல்லையில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது. வாழ்வாதாரத்திற்கே வழியில்லாமல் தவிக்கும் வடசென்னை மக்களுக்கு வளர்ச்சித் திட்டம் என்பது பெயரளவிலேயே இருப்பதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

Tags: வடசென்னைIs North Chennai unlivable?எண்ணூர் கோத்தாரி உரத் தொழிற்சாலைஉலோகம் கலந்த நச்சுத் துகள்
ShareTweetSendShare
Previous Post

தொடரும் விபத்துகளால் அதிர்ச்சி : ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி!

Next Post

தண்ணீர் லாரியால் கலைந்த கனவு : அலட்சியத்தால் பறிபோன உயிர்!

Related News

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies