தண்ணீர் லாரியால் கலைந்த கனவு : அலட்சியத்தால் பறிபோன உயிர்!
Aug 8, 2026, 03:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தண்ணீர் லாரியால் கலைந்த கனவு : அலட்சியத்தால் பறிபோன உயிர்!

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை பெரம்பூரில் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் கனவுகளுடன் பள்ளிக்குச் சென்ற மாணவி, தண்ணீர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி உயிரிழப்பின் அலட்சியத்திற்கு யார் காரணம்?…விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

பல்வேறு கனவுகளோடு பள்ளியில் கொண்டு சென்று விடுவதற்காக அழைத்துச் சென்ற மகள், தன் கண்முன்னே தண்ணீர் லாரி மோதி உயிரிழப்பதை, பெற்ற தாய் பார்ப்பது வேதனையிலும் மிகுந்த வேதனை. அப்படி அதிர்ச்சியளிக்கும் சம்பவம் தான் சென்னை பெரம்பூரில் நிகழ்ந்தது.

சென்னை கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் யாமினி, 5 ஆம் வகுப்பு மாணவியான தனது மகள் சவுமியாவை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது தண்ணீர் லாரியில் விழுந்து மாணவி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண்முன்னே மகள் உயிரிழந்ததைக் கண்டு கதறித் துடித்தார் யாமினி.  பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதித்ததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த பகுதியான பேப்பர் மில்ஸ் சாலை மிகவும் குறுகலானது. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படக்கூடிய சாலை. அந்த சாலையில் 4-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளி நேரங்களில் போக்குவரத்து போலீசார் முறையாக போக்குவரத்தைக் கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் அந்த பகுதி மக்கள். மாணவி இறந்ததை தங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், மாணவியின் குடும்பத்தினரை நேரில் பார்த்துக் கூட ஆறுதல் சொல்ல முடியவில்லை எனவும், மாணவியின் வீட்டருகே வசிப்பவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து சென்னை காவல் ஆணையர் அருண், போக்குவரத்து காவல்துறைக்கு பல்வேறு உத்தரவுகளையும், அறிவுறுத்தலையும் பிறப்பித்துள்ளார்.  பள்ளிகள் உள்ள பகுதிகளில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விபத்துக்களை ஏற்படுத்தும் வாகனங்களைக் குறைந்தது 100 நாட்களுக்குத்  திருப்பி அளிக்கக் கூடாது என்றும், பள்ளி கல்லூரிகளுக்கு அருகே போக்குவரத்து காவலர்கள் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் பீக் ஹவர்ஸ் என்று கூறப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில், சாலையில் கனரக வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, பணியைச் சரியாகச் செய்யாததால் புளியந்தோப்பு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்திக்கு துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் செம்பியம் போக்குவரத்து ஆய்வாளர் சுடலைமணியை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்திற்குத் தண்ணீர் லாரி ஒரு காரணம் என்று கூறினாலும், மற்றொரு காரணம் விபத்து நிகழ்ந்த சாலையில் இருந்த பள்ளங்கள் தான் என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். அஜாக்கிரதையால் நிகழும் விபத்துக்குப் பின் நடவடிக்கை எடுக்காமல், விபத்து நடக்காமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: A dream shattered by a water truck: A life lost due to negligenceதண்ணீர் லாரியால் கலைந்த கனவுதண்ணீர் லாரி மோதிய பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவி!
Share
Tweet
SendShare
Previous Post

வாழத் தகுதியற்றதா வடசென்னை?

Next Post

ட்ரம்பின் பகடைக்காயாகும் முனீர்? : நச்சுப்பாம்புக்கு பால் வார்க்கும் பகீர் பின்னணி அரசியல்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies