பூச்சிகளின் ஆச்சரியங்கள்!
Aug 12, 2025, 03:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பூச்சிகளின் ஆச்சரியங்கள்!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பூச்சிகள் அருங்காட்சியகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூச்சிகளையும் அதன் வரலாற்றையும்  3 டி தொழில்நுட்பத்தில் மெய்நிகர் காட்சியாகப் பார்க்கும்  வகையில்  ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பூச்சிகளையும் அதன் ஆச்சரியங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள உதவும் இந்த பூச்சிகளின் அருங்காட்சியகம் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் இன்றியமையாத பங்களிப்பை வழங்கி வரும் பூச்சி இனங்கள் ஒவ்வொன்றும் இயற்கையின் சூழலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய பூச்சிகள் மற்றும் அவை சார்ந்திருக்கும் இனங்கள் குறித்தும் அறிந்து கொள்ள ஏதுவாக, கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூச்சிகள், 2 ஆயிரத்தி 500க்கும் அதிகமான வண்டு மற்றும் எறும்பு வகைகள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சி இயல் துறையின் மூலம் ஆறாயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் இந்தியா மட்டுமின்றி வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த பூச்சி இனங்களும், ஒட்டுண்ணிகளும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. பூச்சிகளுக்கு அருகிலேயே அவற்றின் வகை, இனம், நன்மை, தீமை உள்ளிட்ட விவரங்களும் எல்.இ.டி திரைகள் மூலமாக விளக்கப்பட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது

பூச்சிகளுக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், நாணயங்கள், அதனை வெளியிட்ட நாடுகள், பூச்சிகள் குறித்து உலகளவில் வெளிவந்திருக்கும் நூல்கள் ஆகியவையும் இந்த பூச்சிகள் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் அருங்காட்சியகத்தின் வாயிலில் தேனீக்கள் வளர்க்கும் பண்ணையும் உருவாக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தின் நுழைவுவாயிலில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் வயலின் மாண்டிஸ் பூச்சியின் வடிவ வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பூச்சிகளை வெறும் பூச்சிகளாக மட்டுமே கடந்து செல்லாமல் அவற்றின் ஆச்சரியங்களையும் 3 டி தொழில்நுட்பத்தில் மெய்நிகர் காட்சிகளின் மூலம் தெரிந்து கொள்ள உதவும் இந்த அருங்காட்சியகம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: The wonders of insectsகோவை வேளாண் பல்கலைக்கழகம்பூச்சி
ShareTweetSendShare
Previous Post

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

Next Post

தொடரும் விபத்துகளால் அதிர்ச்சி : ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி!

Related News

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!

பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது : பிரதமர் மோடி

வெளிமாநில தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தம்!

தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு : மாநகராட்சி பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 11 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்தவை : அமெரிக்க பாது​காப்பு நிபுணர்!

தஞ்சாவூர் : கழிவுநீர் கலந்த குடிநீரால் மஞ்சள் காமாலை பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies