பூச்சிகளின் ஆச்சரியங்கள்!
Mar 19, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பூச்சிகளின் ஆச்சரியங்கள்!

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பூச்சிகள் அருங்காட்சியகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூச்சிகளையும் அதன் வரலாற்றையும்  3 டி தொழில்நுட்பத்தில் மெய்நிகர் காட்சியாகப் பார்க்கும்  வகையில்  ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பூச்சிகளையும் அதன் ஆச்சரியங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள உதவும் இந்த பூச்சிகளின் அருங்காட்சியகம் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் இன்றியமையாத பங்களிப்பை வழங்கி வரும் பூச்சி இனங்கள் ஒவ்வொன்றும் இயற்கையின் சூழலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய பூச்சிகள் மற்றும் அவை சார்ந்திருக்கும் இனங்கள் குறித்தும் அறிந்து கொள்ள ஏதுவாக, கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூச்சிகள், 2 ஆயிரத்தி 500க்கும் அதிகமான வண்டு மற்றும் எறும்பு வகைகள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சி இயல் துறையின் மூலம் ஆறாயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் இந்தியா மட்டுமின்றி வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த பூச்சி இனங்களும், ஒட்டுண்ணிகளும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. பூச்சிகளுக்கு அருகிலேயே அவற்றின் வகை, இனம், நன்மை, தீமை உள்ளிட்ட விவரங்களும் எல்.இ.டி திரைகள் மூலமாக விளக்கப்பட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது

பூச்சிகளுக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், நாணயங்கள், அதனை வெளியிட்ட நாடுகள், பூச்சிகள் குறித்து உலகளவில் வெளிவந்திருக்கும் நூல்கள் ஆகியவையும் இந்த பூச்சிகள் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் அருங்காட்சியகத்தின் வாயிலில் தேனீக்கள் வளர்க்கும் பண்ணையும் உருவாக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தின் நுழைவுவாயிலில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் வயலின் மாண்டிஸ் பூச்சியின் வடிவ வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பூச்சிகளை வெறும் பூச்சிகளாக மட்டுமே கடந்து செல்லாமல் அவற்றின் ஆச்சரியங்களையும் 3 டி தொழில்நுட்பத்தில் மெய்நிகர் காட்சிகளின் மூலம் தெரிந்து கொள்ள உதவும் இந்த அருங்காட்சியகம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: The wonders of insectsகோவை வேளாண் பல்கலைக்கழகம்பூச்சி
ShareTweetSendShare
Previous Post

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

Next Post

தொடரும் விபத்துகளால் அதிர்ச்சி : ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி!

Related News

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies