பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி - பொதுமக்கள் அவதி!
Jun 23, 2026, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 07:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் உரிய நேரத்தில் பணிகள் முடிக்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நுங்கம்பாக்கம் என்பது சென்னையின் மையப்பகுதி என்பதைத் தாண்டி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் பிரதான பகுதியாக அமைந்திருக்கிறது. அப்படியான பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் பள்ளம் மேடுகள், பணிகள் முடிந்தும் மூடப்படாத பள்ளங்கள் எனச் சாலைகளில் பயணிக்கவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் சூழலை உருவாக்கியுள்ளது. வள்ளுவர் கோட்டம் சாலையில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மாதங்கள் பல கடந்தும் நிறைவடையாமலே காட்சியளிக்கிறது.

குறிப்பிட்ட காலங்களுக்குள் முடிக்கப்பட வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் மழைக்காலம் முடிந்தும் தொடர்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் அரை மணி நேரம் மழைபெய்தாலே மழைநீர் குளம் போலத் தேங்கியிருக்கும் வள்ளுவர் கோட்டம் சாலையில், பள்ளம் எது? மேடு எது? எனத் தட்டுத்தடுமாறியே பயணிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

காலை 7 முதல் 9 மணி வரையிலும் மாலை 4 முதல் 7 மணி வரையிலும் பள்ளி கல்லூரிக்குச் செல்வோர், பணிக்குச் செல்வோர் என ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் இந்த சாலையில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் மழைநீர் வடிகால் பணிக்கென பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் நிலையிலும், அப்பணிகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்கப்படாமல் இருப்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே வெளிப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: மழைநீர் வடிகால் பணிபொதுமக்கள் அவதிThousands of crores wasted: Rainwater drainage work at a snail's pace - public sufferingநத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணிகோடி வீண்
ShareTweetSendShare
Previous Post

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

Next Post

பூச்சிகளின் ஆச்சரியங்கள்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies