எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!
Aug 7, 2026, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை அருகே கரும்பு விவசாயிகள்  930 நாட்களைக் கடந்தும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த தீவிரப்போராட்டத்தின் முழுப் பின்னணிதான் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தமிழக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்,  திருஆரூரான் சர்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கருப்பு கொடி காட்டினர். இதையடுத்து போலீசார் அந்த விவசாயிகளைக் கைது செய்தனர்.

திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு சுமார் 212  கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்க வேண்டி உள்ளது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டது. விவசாயிகள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க தனியார்  சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. தற்போது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  சுமார் 2000 கோடி மதிப்புள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை மற்றும் அது தொடர்புடைய சொத்துக்களை கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் வெறும் 147 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.  ஆனால்  அதன்பிறகும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்ற குமுறல் எழுந்துள்ளது.

இதற்கிடையே கரும்பு விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வங்கிகளில் 300 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நிலையில் வாங்காத கடனுக்கு விவசாயிகள் சிவில் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறார்கள்.

தங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் தங்கள் பெயரில் வாங்கிய கடனை சம்பந்தப்பட்ட நிறுவனம் வட்டியுடன் செலுத்துமாறும் வலியுறுத்தி விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி  பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதியிலிருந்து திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் வருகையின் போது கருப்பு கொடி காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  கரும்பு விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து தமது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags: When will life be sweet? : Sugarcane farmers are waiting with bitterness!கரும்பு விவசாயிகள்கசப்புடன் காத்திருக்கும் விவசாயிகள்
Share
Tweet
SendShare
Previous Post

குப்பைக் கிடங்காக மாறும் வ.உ.சி சந்தை!

Next Post

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies