தண்ணீர் லாரியால் கலைந்த கனவு : அலட்சியத்தால் பறிபோன உயிர்!
Jun 20, 2025, 05:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தண்ணீர் லாரியால் கலைந்த கனவு : அலட்சியத்தால் பறிபோன உயிர்!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பெரம்பூரில் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் கனவுகளுடன் பள்ளிக்குச் சென்ற மாணவி, தண்ணீர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி உயிரிழப்பின் அலட்சியத்திற்கு யார் காரணம்?…விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

பல்வேறு கனவுகளோடு பள்ளியில் கொண்டு சென்று விடுவதற்காக அழைத்துச் சென்ற மகள், தன் கண்முன்னே தண்ணீர் லாரி மோதி உயிரிழப்பதை, பெற்ற தாய் பார்ப்பது வேதனையிலும் மிகுந்த வேதனை. அப்படி அதிர்ச்சியளிக்கும் சம்பவம் தான் சென்னை பெரம்பூரில் நிகழ்ந்தது.

சென்னை கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் யாமினி, 5 ஆம் வகுப்பு மாணவியான தனது மகள் சவுமியாவை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது தண்ணீர் லாரியில் விழுந்து மாணவி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண்முன்னே மகள் உயிரிழந்ததைக் கண்டு கதறித் துடித்தார் யாமினி.  பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதித்ததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த பகுதியான பேப்பர் மில்ஸ் சாலை மிகவும் குறுகலானது. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படக்கூடிய சாலை. அந்த சாலையில் 4-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளி நேரங்களில் போக்குவரத்து போலீசார் முறையாக போக்குவரத்தைக் கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் அந்த பகுதி மக்கள். மாணவி இறந்ததை தங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், மாணவியின் குடும்பத்தினரை நேரில் பார்த்துக் கூட ஆறுதல் சொல்ல முடியவில்லை எனவும், மாணவியின் வீட்டருகே வசிப்பவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து சென்னை காவல் ஆணையர் அருண், போக்குவரத்து காவல்துறைக்கு பல்வேறு உத்தரவுகளையும், அறிவுறுத்தலையும் பிறப்பித்துள்ளார்.  பள்ளிகள் உள்ள பகுதிகளில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விபத்துக்களை ஏற்படுத்தும் வாகனங்களைக் குறைந்தது 100 நாட்களுக்குத்  திருப்பி அளிக்கக் கூடாது என்றும், பள்ளி கல்லூரிகளுக்கு அருகே போக்குவரத்து காவலர்கள் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் பீக் ஹவர்ஸ் என்று கூறப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில், சாலையில் கனரக வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, பணியைச் சரியாகச் செய்யாததால் புளியந்தோப்பு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்திக்கு துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் செம்பியம் போக்குவரத்து ஆய்வாளர் சுடலைமணியை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்திற்குத் தண்ணீர் லாரி ஒரு காரணம் என்று கூறினாலும், மற்றொரு காரணம் விபத்து நிகழ்ந்த சாலையில் இருந்த பள்ளங்கள் தான் என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். அஜாக்கிரதையால் நிகழும் விபத்துக்குப் பின் நடவடிக்கை எடுக்காமல், விபத்து நடக்காமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: A dream shattered by a water truck: A life lost due to negligenceதண்ணீர் லாரியால் கலைந்த கனவுதண்ணீர் லாரி மோதிய பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவி!
ShareTweetSendShare
Previous Post

ட்ரம்பின் பகடைக்காயாகும் முனீர்? : நச்சுப்பாம்புக்கு பால் வார்க்கும் பகீர் பின்னணி அரசியல்!

Next Post

ரூ.3,498 கோடி மோசடி, கோபாலபுரத்தின் பேராசை – அண்ணாமலை

Related News

கிருஷ்ணகிரி : கடன் பிரச்னை தொடர்பாக பெண் மீது தாக்குதல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா : ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு!

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக : அண்ணாமலை விமர்சனம்!

திருப்போரூர் : சாலையில் சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டல்!

தயாநிதி மாறன் நோட்டீஸ் : சன் டிவி நெட்வொர்க் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாட்கள் கால அவகாசம் : அதிபர் டிரம்ப்

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரி ரயில்வே மேம்பாலம் மாற்றி அமைக்கப்படும் : அறிவிப்பு

மதுரை : திருமாவளவன் கார் முன்பு சண்டையிட்டு கொண்ட விசிக நிர்வாகிகள்!

நெல்லையப்பர் கோயில் நில வழக்கு – நீதிமன்றம் ஆணை!

அசீம் முனீர்- ட்ரம்ப் சந்திப்பு : தொடரும் ஆப்ரேஷன் சிந்தூர் – செக் வைத்த பிரதமர் மோடி!

சில காங். தலைவர்களுடன் கருத்து வேறுபாடு உள்ளது : சசிதரூர் 

திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த போலி பட்டாவை ரத்து செய்த கோட்டாட்சியர் : உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியீடு!

ஓசூர் அரசு மருத்துவமனையில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் : மக்கள் அவதி!

முருகர் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு!

மகாராஷ்டிரா : துணை விமானி உடலுக்கு இறுதி அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies