கோவை விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் முருகர் பக்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து பொதுமக்களுக்கு அழைப்பிதழை வழங்கினர்.
மதுரையில் வரும் 22 ல் இந்து முன்னணி சார்பில் முருகர் பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து தரப்பு தலைவர்களும் இந்து அமைப்பினரும் இம்மாநாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
பொதுமக்கள் வெகுவாக இம்மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாநாட்டுக்கு வருகை தர வலியுறுத்தி பேருந்துகளில் பயணிகளுக்கும் பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.