காங்கிரஸ் தலைவர்கள் சிலருடன் தனக்குக் கருத்து வேறுபாடு உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சசிதரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் கட்சி தொண்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், எனினும் சில தலைவர்களுடன் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்கிறது என்றும் கூறினார்.