மதுரையில் திருமாவளவன் கார் முன்பு சண்டையிட்டுக் கொண்ட விசிக நிர்வாகிகள் செய்தியாளர்களையும் அவதூறாகப் பேசிய சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது..
மதுரையில் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற திருமாவளவன் நிகழ்வை முடித்துக்கொண்டு காரில் சென்றுக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விசிகவினர் காரை இடைமறித்தபடி ஒருவரை ஒருவர் தாக்க முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கட்சியின் நிர்வாகிகள் இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனைச் செய்தியாகச் சேகரிக்க முயன்ற செய்தியாளர்களை அங்கிருந்த விசிகவினர் அவதூறாகப் பேசியபடி தாக்க முயன்றனர்.
இதன் காரணமாகச் சிறிது நேரம் அசாதாரண சூழல் ஏற்பட்ட நிலையில், கட்சியின் தலைவர் முன்பே விசிக-வினர் ஒருவரை ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.