திருப்போரூரில் சாலையில சென்ற சிறுமியிடம் ஹெல்மெட் அணிந்து வந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு பயிலும் சிறுமி தனது சகோதரருடன் டியூஷன் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், திருப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கம் புது காலனியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரைக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.