கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கடன் பிரச்சனை தொடர்பாக பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளையம்பதி கிராமத்தைச் சேர்ந்த கோமதி – தருமராஜ் தம்பதி அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் சிவா ஆகியோரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்த போது அவர்களை வழிமறித்த பிரபாகரன் மற்றும் சிவா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் கோமதி மயக்கமடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் கோமதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.