மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தானே, ராய்காட், நாஷிக், புனே உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.