திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே வெங்காயம் வாங்கி தருவதாகக் கூறி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
மூலனூர் பாறைப்பட்டியை சேர்ந்த செல்லாத்தாள் என்ற மூதாட்டி அதே பகுதியில் உள்ள மளிகைக் கடையில் வெங்காயம் வாங்க சென்றிருந்தார்.
கடையில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அங்கிருந்த இருவர் வெங்காயம் வாங்கி தருவதாகக் கூறி மூதாட்டி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ரதின், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.