இந்துக்களின் ஒற்றுமையையும், உரிமைகளையும் மீட்டெடுக்க மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என வெள்ளிமலை சைதானந்தஜி மகராஜ் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள இந்து தர்ம வித்யா பீடம் மூலம் அனைத்து கோயில்களிலும் அவர் சமயம் மற்றும் சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் பொதுமக்கள் அனைவரும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.