ஈரான் நாட்டில் சிக்கியுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே போர் நிலவும் இவ்வேளையில், ஈரான் நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இருக்கின்றனர் என்ற செய்தி அறிந்ததும் அவர்களைப் பற்றியான தகவல்களை சேகரித்திட முதற்கட்டமாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கலந்தாலோசித்தாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியுறயுத்துறை அமைச்சகத்திடம் முறையிட்டு இந்திய மீனவர்களைப் பாதுகாப்புடன் மீட்டுக் கொண்டு வர தமிழக பாஜக உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் கூறினார்.