சென்னை மடிப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஸெப்டோ டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
குபேரன் நகர் பகுதியை சேர்ந்த பெண் ஐடி ஊழியர், கடந்த 13-ம் தேதி ஸெப்டோ செயலி மூலமாக சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அவற்றை டெலிவரி செய்வதற்காக கோபிநாத் என்ற ஊழியர் சென்றுள்ளார்.
அப்போது இளம்பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்துகொண்ட அவர், பெண்ணிடம் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிடவே, கோபிநாத் அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்த நிலையில், கோபிநாத்தை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.