நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள மேம்பாலம் ஒரு வழிப் பாதையாக இருப்பதால் அதிக விபத்துகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
மூன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் திருச்செங்கோடு ,சங்ககிரி செல்லும் வகையில் ஒருவழிப்பாதையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்த மக்கள் இந்த பாலத்தால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்தனர். மேலும் இந்த பாலம் ஒரு வழிப் பாதையாக இருப்பதால் உள்ளூர் வாசிகளே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது எனவும் இதனை மாற்றியமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.