ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா நேரடியாகக் களமிறங்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அணுக்குண்டுகளைத் தாங்கும் திறன் பெற்ற டூம்ஸ்டே விமானம் வாஷிங்டன் வந்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் மிகப் பாதுகாப்பான விமானங்களில் ஒன்றான போயிங் இ-4பி நைட்வாட்ச் விமானமே செல்லமாக டூம்ஸ்டே என அழைக்கப்படுகிறது.
நாட்டில் அணு ஆயுத போர் அல்லது தேசிய பேரழிவின்போது, இந்த விமானம் வான்வழி ராணுவ கட்டளை மையமாகச் செயல்படும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டது ஆகும்.
தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் சூழலுக்கு மத்தியில், டூம்ஸ்டே விமானம் தரையிறங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.