அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, இஸ்ரேலின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வோம் என்று கூறிய ஈரான், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.