177 நாடுகளில் சர்வதேச யோகா தினம் பின்பற்றப்படுவதற்குப் பிரதமர் மோடி எடுத்த முன்னெடுப்புகளே காரணம் எனச் சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பாளர் ராமகிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார்.
சென்னை சிட்லப்பாக்கம் மைதானத்தில் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் சேவா பாரதி தமிழ்நாடு யோகா சங்கம் ஆகியவை இணைந்து, 11வது சர்வதேச யோகா தின நிகழ்வைக் கொண்டாடினர்.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம், யோகாசனங்களைச் செய்து காட்டி அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பாளர் ராமகிருஷ்ண பிரசாத், உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளுக்கு யோகாசனங்கள் தீர்வாக அமைவதாகக் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் கருத்துக்களால், மக்கள் தவறான பாதையில் செல்வதைத் தவிர்ப்பதற்காகக் கலைகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.