பீகாரில் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ஆகியவற்றை 400 ரூபாயில் இருந்து ஆயிரத்து 100 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம், 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேர் பயனடைவார்கள் என்று நிதிஷ் குமார் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த ஓய்வூதிய உயர்வு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.